Monday, December 31, 2012

விஜய் டிவி நீயா நானா சர்ச்சை - ஒரு தன்னிலை விளக்கம்

நேற்று நடைபெற்ற விஜய் டி.வி நீயா நானா நிகழ்ச்சி குறித்து
வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்து அந்த நிகழ்ச்சியை
புறக்கணியுங்கள் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

புறக்கணியுங்கள் என்று சொல்லி விட்டு நானே பார்ப்பது
தார்மீக நெறி இல்லை என்பதால் நான் அந்த நிகழ்ச்சியை
பார்க்கவில்லை.

என் மனைவி பார்த்து விட்டு 'அலசப்பட்ட விஷயங்கள் 
என்னவோ நன்றாகத்தான் இருந்தது " என்று சொல்லி
அவர்களே ஒரு பின்னூட்டம் போட்டார்கள். இது வரை
அவர் செய்யாத ஒன்று.

மூத்த தோழர் காஷ்யபன் அவர்களும் அந்த நிகழ்ச்சி
பெண்ணடிமைத்தனத்தை சாடியது, நான் அவசரப்
பட்டுவிட்டேன் என்று பின்னூட்டம் கொடுத்திருந்தார்.

அலுவலகத்திலும் சில தோழர்கள் அந்த நிகழ்ச்சியின்
பெரும்பாலான பகுதிகள் நன்றாக இருந்தது என்றும்
சமையல் வேலைக்கு மனைவிக்கு சம்பளம் கொடுப்பேன்
என்று சொன்ன ஒருவரை கோபிநாத் கடித்து குதறி
விட்டதாகவும் சொன்னார்கள்.

அந்த நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் என்று நான்
எழுதியதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை.

நான் எழுதியது விளம்பரத்தைப் பார்த்து விட்டு.

அந்த விளம்பரம் அந்தரங்கத்தை அம்பலத்தில்
வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகத்தான் இருந்தது.

நல்ல நிகழ்ச்சி என்றாலும் அதனை விளம்பரப்படுத்த,
பரபரப்பாக்க கையாண்ட உத்தி மிகவும் மோசமானது.
குடம் பாலில் கலக்கப்பட்ட குவளை விஷம்.

இது நிச்சயம் சரியான அணுகுமுறை அல்ல.

சரக்கின் மீது நம்பிக்கை இருந்தால் இப்படிப்பட்ட
வழிமுறைகளை கையாள வேண்டாமே

3 comments:

  1. THOZHAR,

    UNGA PATHIVE ORU NALLA VILAMBARAM THAAN. ATHANAALA THAAN NIRAYA PER PARTHIRUKKAANGA. ANAALUM PROGRAM ROMBA BORE THAN.

    ReplyDelete
  2. Thanks to Radha Mam - ungalidamirunthu oru 'meesaiyil mann ottavillai' pathivu kidaithathu.
    And thanks to Kasyap sir too.

    ReplyDelete
  3. நாட்டில நேர்மையா விளக்கம் சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்களே

    ReplyDelete